திருச்சி: குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சத்யசீலன் (21). இவர் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த குடும்ப பிரச்சனை காரணமாக சத்யசீலன் எலிபேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சத்யசீலனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்யசீலன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.