தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி : ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதால் தடை விதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யாத பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதால், அவை மீண்டும் பெற தடை விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இந்த தொண்டு நிறுவனங்கள், செப்., 1 முதல், மத்திய உள்துறை அமைச்சகத்தில், www.fcraonline.nic.in என்ற இணையதளம் வாயிலாக சீராய்வு மனு தாக்கல்செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.