தொழில் அதிபர் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

மும்பை :ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகேஷ் அம்பானியின் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். நான்கு முறை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, அவர் மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை துவக்கிய போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் போன் எண்ணை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். அவர் பெயர் அப்சல் என தெரியவந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்தாண்டு முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகில், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட
கார் நிறுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அம்பானியின் குடும்பத்தினருக்கு, மஹாராஷ்டிரா போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.