பாரத மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் 75வது சுதந்திரதின வாழ்த்துக்கள் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, உப கண்ட நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் பாரத தேசத்தின் 75 ஆவது சுதந்திரதினமான இன்று

பாரத மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இனிய 75வது சுதந்திரதின வாழ்த்துக்களை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கலை, கலாச்சார, மத, பண்பாட்டு ரீதியான இருநாட்டுத் தொடர்புகளை கொண்டுள்ள நாம், பாரத தேசத்தின் இந்த பொன்னான நாளில் பாரத மக்களுக்களோடு உள்ளங்களால் இணைந்து எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

இலங்கை மக்களுக்கு இந்திய மக்களும் இந்திய அரசும் காலங்காலமாக செய்துவரும் உதவிகளுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்னல்களும், நெருக்கடிகளும் எம்மை சூழ்ந்த போதெல்லாம் முதலாவது உதவிக்கரத்தை நீட்டும் பாரத தேசம் எங்கள் உறவு தேசமாகும்.

இந்த இனிய நாளில் தேச பக்தி நிறைந்த பாரத மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இனிய 75வது சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.