இளவரசர் ஹரியையும் ஆண்ட்ரூவையும் விட இவர்தான் பெரிய பிரச்சினையாக இருப்பார்: அஞ்சும் பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள்


*இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரால் ராஜ குடும்பத்துக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன.

*ஆனால், அவர்களைவிட இளவரசர் சார்லஸ்தான் பெரிய பிரச்சினை என ராஜ குடும்ப நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட, இளவரசர் சார்லஸ்தான் ராஜ குடும்பத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதுகிறார்கள்.

வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விடயங்களால் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கையில்லை என தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹரியையும் ஆண்ட்ரூவையும் விட இவர்தான் பெரிய பிரச்சினையாக இருப்பார்: அஞ்சும் பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் | Anjum British Royal Family Experts

image – thetimes

ராஜ குடும்ப உறுப்பினர்களிலிருந்து வித்தியாசமாக நடந்துகொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரால் உருவாகியுள்ள பிரச்சினைகள் காலப்போக்கில் மறைந்துபோய்விடும். ஆனால், ராஜ குடும்பத்துக்கு உண்மையாக பிரச்சினை ஏற்படுமானால், அது ராஜ குடும்ப வாரிசான, அதாவது அடுத்து மன்னராகப்போகும் இளவரசர் சார்லலால்தான் இருக்கும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Libby Purves.

இளவரசர் சார்லஸ் தனது தொண்டு நிறுவனத்துக்கு தீவிரவாதி ஒசாமா பின் லேடன் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்ற விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

இதுபோன்ற பிரச்சினைகள் ராஜ குடும்பத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறும் ராஜ குடும்ப நிபுணரான Libby Purves, விரைவில் மகாராணியாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இப்படிப்பட்ட சார்லஸ் எப்படி ஒரு சிறந்த மன்னாராக இருக்கமுடியும் என இளைஞர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்கிறார்.
 

இளவரசர் ஹரியையும் ஆண்ட்ரூவையும் விட இவர்தான் பெரிய பிரச்சினையாக இருப்பார்: அஞ்சும் பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் | Anjum British Royal Family Experts

image – thesun



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.