தரமற்ற உணவு வழங்கியதால் கேட்டரிங் சர்வீஸ் மேலாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்எல்ஏ

மகாராஷ்டிராவில் மதிய உணவுத் திட்டத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங் சர்வீஸ் மேலாளரை சிவசேனா எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.

ஹிங்கோலி மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, தரமற்ற உணவு தயாரித்து வழங்கியதாகக் கூறி கேட்டரிங் சர்வீஸ் மேலாளரிடம் சந்தோஷ் பங்கர் வாக்குவாதம் செய்து திடீரென கன்னத்தில் அறைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.