காஷ்மீரில் பண்டிட்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர்பலி, சகோதரர் காயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

latest tamil news

ஷோபியான் மாவட்டத்தின் சோடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த சுனில்குமார் மற்றும் பிண்டுகுமார் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடந்தது. அதில், சுனில்குமார் உயிரிழந்தார். பிண்டுகுமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

latest tamil news

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து பண்டிட்கள் போராட்டம் நடத்தினர்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.