ஆர்எஸ்எஸ் உருவாக்குகிற 'கலாச்சாரம்'இதுதான்..! – கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!!

குஜராத் மாநிலத்தில், முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் கண் முன்பாகவே அவருடைய குழந்தை உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேர், 75ஆவது சுதந்திர நாளில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை ஆரத்தி எடுத்து கொண்டாடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உருவாக்குகிற சமூகத்தின் ‘கலாச்சாரம்’ இதுதான் என்பது அம்பலப்பட்டு நிற்கிறது.

மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் சமூக செயல்பாட்டாளர்களும், உண்மையை பேசும் பத்திரிகையாளர்களும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை, தலித் மக்கள் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் வாடுகிறார்கள்.

ஆனால் கொலை பாதக, வல்லுறவு குற்றவாளிகள் விடுதலையாகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்கு நம்மை இழுத்து வந்திருக்கும் மோடி ஆட்சிக்கு முடிவுகட்டாமல், ஜனநாயக இந்தியாவை பாதுகாக்க முடியாது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது.”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.