விருதுநகர் || இருசக்கர வாகனத்தின் மீது மொபட் மோதி விபத்து – வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கரராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவர் இருசக்கர வாகனத்தில் அட்டைமில் முக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அய்யனார்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மொபட் சுரேஷ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் மொபட்டில் வந்த குருமூர்த்தி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.