பஞ்சாப் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், 94, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்.

இவர், கடந்த ஜூன் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக, பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்; பின், குணமடைந்து வீடு திரும்பினார்.இந்நிலையில், காய்ச்சல் காரணமாக நேற்று சண்டிகரில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.