ரூ.2.42 கோடி தங்கம்கடத்தல்: 2 பேர் கைது| Dinamalar

சிலிகுரி: மேற்கு வங்கத்தில், ‘ஷூ’ வுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2.42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து, நேற்று இருவரை கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருவர் தங்கம் கடத்திச் செல்வதாக, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இருவரை கைது செய்தனர்.அவர்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த ௨௯ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 2.42 கோடி ரூபாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.