பெட்ரோ- டீசல் விலை
பெட்ரோல் – டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோ ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீட் தேர்வு மாணவி தற்கொலை
நேற்று நள்ளிரவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தானைச் சேந்த தனிஷ்கா பிடித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருவள்ளூர் : அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் நாள்
இந்திய ஒற்றுமை பயணம்- 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி. பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு. நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி உடன் அனிதாவின் சகோதரர் உரையாடல்.
ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா. இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை வாழ்த்த வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட்
ஓணம் என்பது பாகுபாடுகளைக் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும். செழிப்பு, வளம், அமைதி போன்ற கனவுகளை நிறைவேற்றும் பண்டிகை ஓணம் . ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும் . ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து
டெல்லியில் சகல வசதிகளுடன் கூடிய சென்ட்ரல் விஸ்டாவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. ராஜ்பாத் என்ற பெயர், கர்தவ்ய பாதை என மாற்றப்படுகிறது.
திருவள்ளூர் : அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை.
இந்திய ஒற்றுமை பயணம்- 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி.
இடைக்கால பொதுச்செயலாளராக முதன்முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி . மாவட்ட செயலாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்க ஏற்பாடு