ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் – 19ந்தேதி இறுதி சடங்கு…

லண்டன்: வயது முதிர்வு காரணமாக மரணத்தை தழுவிய 96வயதாக இங்கிலாந்து  ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து,  19ந்தேதி இறுதி சடங்கு நடைபெறுகிறது.

வயது முதிர்வு காரணமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். அவரது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் இருந்தது. அங்கிருந்துசாலை மார்க்கமாக அவரது உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு எடுத்து வரப்படுகிறது. முதலில்,  எடின்பர்க்கில் உள்ள ஹோலி ரூட் ஹவுஸ் (Holyrood house) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, செயின்ட் கிலேஸ் கதீட்ரல் (St Giles’ Cathedral தேவாலயத்துக்கு ஊர்வலமாக ராணியின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் அரச குடும்பத்தினர், ராணியின் உடலை பெற்றுக் கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை)  பிற்பகல் ராணியின் உடல் எடின்பர்க்கில் இருந்து தனி விமானத்தில், இங்கிலாந்தின் நார்த்ஹோல்ட் (Northolt) நகருக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் சாலை மார்க்கமாக ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது .தொடர்ந்து, அவரது உடல் குயின்ஸ் கார்டன், நாடாளுமன்ற வீதி, நாடாளுமன்ற சதுக்கம் வழியாக வெஸ்ட் மினிஸ்டர் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு, 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இதையடுத்து செப்டம்பர் 19ம் தேதி திங்கள்கிழமை, ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.