சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலில் மர்ம மரணம் – வீட்டு உரிமையாளர் கைது

செங்கம் அருகே சட்டவிரோதமாக ஒரு வீட்டில் சூதாட வந்தவர் திடீரென மரணமடைந்ததால், அதில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார். மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் வெங்கடேசனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மருத்துவமனை 500 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் மாரடைப்பு வந்த வெங்கடேசனை மருத்துவமனையில் அனுமதிக்காமல் உடன் விளையாடியவர்கள் ஓடிவிட்டதையடுத்து, அவர்கள்மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சாத்தனூர் டு திருவண்ணாமலை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
image
இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் ஆய்வாளர் செல்வராஜ், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வீட்டின் உரிமையாளர் மோகனை கைதுசெய்து அவரிடமிருந்து நான்கு செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வரும் சூழலில், சூதாட்டத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.