ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் உயிரினங்களின் பாலினம் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட வேண்டும்

அறிவியல் ஆய்வுக்கு மானியம் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகள் ஆண், பெண் என இருபாலினத்திலும் உயிரின ஆய்வு மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக இரு பாலினங்களை சேர்க்குமாறு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (NIH) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நிதிஉதவி செய்பவர்கள் மற்றும் ஆய்வு வெளியீட்டாளர்கள் ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்று, பாலின அடிப்படையிலான வேறுபாடுகள், பெரும்பாலும் ஹார்மோன் சுயவிவரங்கள் அல்லது பாலின குரோமோசோம்களில் உள்ள மரபணுக்களுடன் தொடர்புடையவை, மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான விவரங்களை அறிய உதவுகிறது.

மற்றொன்று, இரு பாலினங்களைச் சேர்ப்பது விஞ்ஞான ஆய்வின் முடிவுகளை துல்லியமாக்கவும், மறுஉற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் அறிவியல் நோக்கத்திற்கான கேள்விகளை முன்னெடுக்கவும் உதவுகிறது.

ஆய்வுகள் இரண்டு பாலினங்களை உள்ளடக்கியிருந்தால், முடிவுகள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பொதுவாக பாலினத்தைப் பொறுத்து சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் செயல்பாடு மாறுபடுகிறது மேலும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களில் இருதய நோய் அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

பாலினத்தை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு COVID-19 மற்றொரு நல்ல உதாரணம். அதிகமான ஆண்கள் COVID-19 நோயால் இறக்கின்றனர், அதேசமயம் பெண்கள் COVID-19 நோயால் நீண்ட கால பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டில், மருந்தியல் நிபுணர் சூசன் ஹவ்லெட் கர்ப்ப காலத்தில் ஹார்மோன் அளவுகள் இதய செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய ஒரு ஆய்வை எழுதி அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த ஆய்வில் ஆண் எலிகள் குறித்த குறிப்பு எங்கே என்று கேட்டிருந்தனர்.

கர்ப்பம் தொடர்பான உயர் ஹார்மோன் அளவை ஆய்வு செய்ததால், கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் ஹவ்லெட் மற்றும் அவரது குழு பெண் விலங்குகளை மட்டுமே பயன்படுத்தியது.

“ஆண்களில் எல்லாவற்றையும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புவது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது,” என்று அவர் கூறினார்.

இருந்தபோதும் ஆண் எலிகளைக் கொண்டு ஆய்வை மேற்கொண்ட அவர்கள் 2017 ல் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர். எதிர்பார்த்தபடியே அதில், புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனின் விளைவாக பெண்களுக்கு மட்டுமே கர்ப காலத்தில் இதய செல்களில் செயல்பாடு பாதிக்கப்பட்டதாகவும் ஆண்களில் இதை காணவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், உயிரின ஆய்வுகளில் பாலினம் அடிப்படையிலான கணக்கெடுப்பு அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்களும் நிதி அளிக்கும் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.