அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தேவை: அண்ணாமலை கோரிக்கை

சென்னை: அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிமென்ட்ஆலைக்காக, 1996-ல் அரியலூர்மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுமார் 600 விவசாயிகளிடம் இருந்து 300 ஏக்கர் விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அந்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குவதாக அரசு அப்போது அறிவித்தது. அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை ஆராய்ந்த பின்னர்,2017-ல் அரியலூர் சார்பு நீதிமன்றம்,ஒரு ஏக்கருக்கு ரூ.1,25,000 மற்றும்தாமத வட்டி சேர்த்து ரூ.8 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தது.

விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை இழப்பீடு வழங்காமல் அரசு இழுத்தடிக்கிறது.

1983-ல் அனந்தவாடியில் நிலங்களை கையகப்படுத்திய அரசு சிமென்ட் ஆலை நிறுவனம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற உத்தரவாதத்தை இதுவரை நிறைவேற்றவில்லை.

இழப்பீடு தாமதமானதால் ஏக்கருக்கு ரூ.30 லட்சத்தை அரசு உடனேவழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு சிமென்ட் ஆலையில்நிரந்தர வேலை வழங்க வேண்டும். இழப்பீட்டுக்கு இவ்வாறு காத்திருக்க வைத்தால் விமான நிலையம் அமைக்க பரந்தூர் மக்கள் எப்படி நிலம் வழங்குவார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.