மலேசிய மூத்த அரசியல் தலைவர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!

மலேசிய நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தை சே்ர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டத்தோ சாமி வேலு. 1936 இல் மலேசியாவின் இபோ நகரில் பிறந்த இவர், 1959ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசியலில் இருந்து வந்தார்.

இளம் வயது முதலே பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாமி வேலு, சுமார் 30 ஆண்டுகள் மலேசிய நாட்டின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளார்.

இத்தகைய பெருமைமிக்க சாமி வேலு வயோதிகம் காரணமாக சில மாதங்களாகவே உடல்நலம் குன்றி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர உயிரிழந்தார். தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்ததாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சாமி வேலு உயிரிழந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறோம். மலேசிய நாட்டிற்கும் இந்திய சமூகத்தினருக்கு அவர் மகததான சேவைகளை ஆற்றி உள்ளார்’ என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தத்துக் செரி.டி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சாமி வேலுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ‘மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் சாமி வேலு மறைவு குறித்து அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். மலேசியாவிலிருந்து பிரவேசி பாரதிய விருதை வென்ற முதல் நபர் என்ற பெருமையை பெ்ற்ற சாமி வேலு இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று பிரதமர் மோடி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மலேசிய நாட்டின் அமைச்சராக சுமார் 30 ஆண்டுகள் பதவி வகித்துள்ள சாமி வேலு, எரிசக்தி, தொலைத்தொடர்பு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 1979 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.