நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது உயர்வு – பார் கவுன்சில் பச்சைக்கொடி!

உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை முறையே 65, 67 ஆக உயா்த்த இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைமையிலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

தற்போது விசாரணை நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது முறையே 60, 62, 65 ஆக உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கம், உயா் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிா்வாகிகள், இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) பங்கேற்ற கூட்டுக் கூட்டம், கடந்த புதன் கிழமை தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

இதில், உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 67 ஆகவும் அதிகரிக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமன்றி பல்வேறு கமிஷன்கள், மன்றங்களின் தலைவா்களாக அனுபவமிக்க மூத்த நீதிபதிகளை நியமிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து பிசிஐ செயலா் ஸ்ரீமான்டோ சென் கூறுகையில், ‘இந்தத் தீா்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும், மத்திய சட்டத் துறை அமைச்சருக்கும் வலியுறுத்தப்படும்’ என்றாா்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.