நானும் அதற்கு தான் காத்திருக்கிறேன்: பாஜகவுக்கு ஆ.ராசா சவால்!

வழக்கு போடுங்கள் அதற்கு தான் காத்திருக்கிறேன் என ஆ.ராசா சவால் விட்டு பேசியுள்ளார்.

சென்னை பெரியார் திடலில், ‘60 ஆண்டுகால விடுதலை ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் விடுதலை சந்தா வழங்கும் விழா’ என்கிற தலைப்பில் திராவிடர் கழகத்தால் கூட்டம் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய

துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, சூத்திரர்கள் என்பவர்கள் யார், மனுஸ்மிருதி அவர்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஆ.ராசாவின் பேச்சை சர்ச்சையாக்கினர்.

இந்துக்களை ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டார் என்று சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதிமுகவும் இந்த இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. ஆ.ராசாவுக்கு எதிராக கடையடைப்பு போராட்டமும் பாஜகவால் நடத்தப்பட்டது. ராசாவுக்கு எதிராக காவல்துறையில் புகாரும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற ‘கழக முப்பெரும் விழா – சமூகநீதி விழா’ என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆ.ராசா பேசினார்.

அப்போது, “இந்து மதத்தை ராசா அவதூறாக பேசிவிட்டார், ராசா மீது வழக்கு போட வேண்டும் என்கிறார்கள். அந்த நாளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மனுஸ்மிருதியையும் கீதையையும் படித்துக்காட்டி, நீங்கள் யார் என்பதைத் தோலுரிக்கவில்லை என்றால் நான் கலைஞரின் பிள்ளை இல்லை” என்று இந்துத்துவாவினருக்கு, பாஜகவினருக்கு ராசா சவால் விட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.