மகன் மீது மன்னர் சார்லஸ் வைத்திருக்கும் அன்பு… பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேருமா?: அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ள தகவல்


இளவரசர் ஹரியுடனான உறவை சரி செய்ய முடியும் என்பதில் மன்னர் சார்லஸ் அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளார்.

ஆனால், ஹரி வெளியிடவிருக்கும் புத்தகம் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றதும், முதல் முறையாக மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றும்போதே, தான் தன் பிள்ளை ஹரி குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தினார்.

அத்துடன், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து ஹரி, மேகனுடன் மன்னர் சார்லஸ் செலவிட்ட நேரங்கள் அவரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

மகன் மீது மன்னர் சார்லஸ் வைத்திருக்கும் அன்பு... பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேருமா?: அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ள தகவல் | Will Separated Families Be Reunited

Picture: Reuters

இன்னமும் மன்னர் தன் இரண்டு பிள்ளைகள் மீதும் அன்பு வைத்திருக்கிறார் என்று கூறும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், எதிர்காலத்தில் இளவரசர் ஹரியும் ராஜகுடும்பமும் இணையக்கூடும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளதைக் கடந்த 16 நாட்களில் காணமுடிந்தது என்கிறார்.

ஆனால், பிரச்சினைகளும் முற்றிலும் தீர்ந்தபாடில்லை. ஹரி அடுத்து வெளியிடவிருக்கும் புத்தகம் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த வாய்ப்பை ஹரி பயன்படுத்திக்கொள்வாரானால், அவருக்கு மட்டுமல்ல, அவரது பிள்ளைகளுக்கும் அது நல்லது.

ஏனென்றால், மன்னர் சார்லஸ் மனது வைத்தால், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகிய தனது இளைய பேரப்பிள்ளைகளுக்கு ராயல் பட்டங்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மகன் மீது மன்னர் சார்லஸ் வைத்திருக்கும் அன்பு... பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேருமா?: அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ள தகவல் | Will Separated Families Be Reunited

Picture: Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.