நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு

நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03 வது அலகு மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

03 முதல் 05 நாட்களுக்குள் திருத்தும் பணிகள் இலங்கை மின்சார சபையால் (CEB) முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் (Twitter ) தளத்தில் நேற்று (27) பதிவிட்டுள்ளார்.

பழுது பார்க்கும் பணிகள் முடியும் வரை மின்சார உற்பத்தியை முகாமை செய்வதற்கு எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை ஆலையின் 3 வது அலகு மூடப்பட்டுள்ளதால் தினசரி மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மின்வெட்டு நேரம் குறித்த சரியான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.