மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு அளி்த்த பேட்டி:

latest tamil news

இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரேசன் அரசி திட்டத்தில், ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு:


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 4% அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.

latest tamil news

10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு:


அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டமானது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது. இதன் மூலம் டில்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.