ஓய்வை அறிவித்தார் மெஸ்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பியூன்ஸ்அர்ன்ஸ்: 2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவ., 21 முதல் டிச., 18 வரை நடக்கிறது. இத்தொடரின் பைனல், கத்தாரின் தேசிய தினத்தில் (டிச., 18) நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர நாயகன் லையோனல் மெஸ்சி 35, நேற்று தனது ஒய்வை அறிவித்தார். கத்தார் உலக கோப்பை தொடர் தனது கடைசி போட்டியாக இருக்கும் என டி.வி.சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மெஸ்சி இதுவரை நான்கு உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். 2022 கத்தார் உலக கோப்பை மெஸ்சிக்கு ஐந்தாவது தொடர் ஆகும். வரும் நவம்பர் 22-ல் சவுதி அரேபிய அணியுடன் அர்ஜென்டினா அணி மோதுகிறது. இதில் மெஸ்சி விளையாடுகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.