வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயில், வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.

இதில், விரைவாக வந்த ரயில் அவற்றின் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்து உள்ளது. இதனை மேற்கு ரயில்வே மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஜே.கே. ஜெயந்த் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் 4 காட்டெருமைகள் வரை சிக்கியுள்ளன. எனினும், என்ஜினின் செயல் பகுதி பாதிக்கப்படவில்லை. இதனால், சில நிமிடங்களில் காட்டெருமைகளின் உடல்கள் நீக்கப்பட்டு, ரயில் புறப்பட்டு சரியான நேரத்தில் காந்திநகரை சென்றடைந்து உள்ளது.

காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் மோடி பயணமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.