இன்று உலக பருத்தி தினம்| Dinamalar

பருத்தியின் முக்கியத்துவத்தை உணர, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 அன்று உலக பருத்தி தினம் கொண்டாடப்படுகிறது. பருத்தியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் குறிக்கோள்.
விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இது வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் உற்பத்தி செலவு குறைவு.
உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆப்பிரிக்காவின் பெனின், பர்கினோபாஷோ, சாட், மாலி நாடுகளின் வேண்டுகோளை ஏற்று உலக வர்த்தக அமைப்பு 2019 அக்., 7ல் இத்தினத்தை அறிவித்தது. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா முதல் 3 இடங்களில் உள்ளன. பெரும்பான்மை நாடுகளில் வளர்க்கப்படும் உலகளாவிய பொருளாக பருத்தி விளங்குகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.