’நோ’ சொன்ன எடப்பாடி… செம குஷியில் ஓபிஎஸ்- சட்டப்பேரவையில் அதகளம்!

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்தில்

பெயர் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை.

நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கிடையில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பின் முடிவு என்னவென்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு முடிவால் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் பட்டியலில் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை.

எனவே நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு ஒதுக்கப்படுகிறது? என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இறுதியான ஒரு முடிவு எடுக்கட்டும். அதைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.

இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்யப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மட்டும் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.