தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி; வீடியோ எடுத்து பகிர்ந்த கணவன்!

கான்பூரில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  தனது மனைவின் செயலை கணவர் வீடியோ எடுத்து பதிவிட்டு பகிர்ந்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் தற்கொலையை பதிவு செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது, அதில் பெண் முதல் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், கழுத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொள்ள முயற்சிப்பதைக் காணலாம். அதே நேரத்தில் அவரது கணவர், அவளை காப்பாற்றவோ அல்லது அவளை தடுக்கவோ செய்யாமல், சம்பவத்தை தொடர்ந்து படம் பிடித்த சமப்வம் பலரை உறைய வைத்துள்ளது. 

கான்பூர் பெண் தற்கொலை: வீடியோவின் உள்ளடக்கம்

அந்த வீடியோ பதிவில், “இது தான் உன் மனநிலையா… ரொம்ப நல்லது.  மிகவும் மோசமான மனநிலை கொண்டிருக்கிறாய் நீ” என்று அந்த நபர் கூறுவதை வீடியோவில் கேட்கலாம். பின்னர் அவள் அவனை முறைப்பதையும் வீடியோவில் காணலாம். 

சமூக பொறுப்புணர்வை கருத்தில் கொண்ட வீடியோவை பகிர வேண்டாம் என்று எங்கள் செய்தி நிறுவன முடிவு செய்துள்ளது. உயிரிழந்தவர் ஷோபிதா குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது கணவர் சஞ்சீவ் குப்தாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. விரக்தியின் காரணமாக, அவர்  தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் எனவும் கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, சஞ்சீவ், ஷோபிதாவின் பெற்றோருக்கு தகவல்  தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, ​​​​தனது மகள் படுக்கையில் கிடப்பதைக் கண்டார். “நாங்கள் வீட்டை அடைந்தபோது, ​​எங்கள் மகளின் உடல் படுக்கையில் கிடந்தது. சஞ்சீவ் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவள் மார்பை அழுத்தி அவளுக்கு முதலுதவி அளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். நாங்கள் உடனடியாக அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். சஞ்சீவ் ஒரு வீடியோவை எங்களிடம் காண்பித்தார். அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவர் எங்களிடம் கூறினார், ”என்று தந்தை ராஜ்கிஷோர் குப்தா கூறினார்.

இதற்கிடையில், போலீசார் ஷோபிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, வீடியோவுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி அனுப் சிங் தெரிவித்தார். “கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரிடம் விசாரணை செய்து வருகிறோம்,” என்றார். இறந்தவரின் உறவினர்கள் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்று ஏசிபி சிங் மேலும் தெரிவித்தார். புகார் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.