பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. கடந்த 2016ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி எம்.பிக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டது.
இவரது எம்.பி பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவு அடைந்தது. இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 6 மாத காலம் அரசு இல்லத்தில் தங்கிக்கொள்ள அனுமதிக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திடீரென வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவியில் உள்ள எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்களுக்கு அரசு வீடு தேவைப்படுகிறது என மத்திய அரசு வாதிட்டது.
களி தின்ன போகும் சீமான்; வெளுத்து வாங்கிய நடிகை!
வழக்கின் முடிவில் அரசு ஒதுக்கீடு செய்த வீட்டை 6 வாரத்திற்குள் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதே பாணியில் தான் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் என்கிற முறையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்த வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் அவரது பதவி காலம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்ததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி வெறுத்துப் போன மத்திய அரசு, சசிகலா புஷ்பாவின் வீடு புகுந்து, பொருட்களை வெளியே வைத்து விட்டு, வீட்டுக்கும் சீல் வைத்திருக்கிறது.
ஓபிஎஸ் கையில் ஆவணங்கள்; கதிகலங்கிய எடப்பாடி!
இந்த வரிசையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நீதிமன்றம் விதித்த கெடுவில் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுவதால், அவரது வீடு காலி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபகாலமாக பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரையும் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மத்திய அரசு எந்த மாதிரியான முடிவு எடுக்கும்? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.