கணவனுடன் ஏற்பட்ட தகராறு கை குழந்தையை அடித்துக் கொன்ற தாய்.! பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு.!

கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியைச் சேர்ந்த தில்சாத் பானு என்ற பெண்ணுக்கு முகமது ரபிக் என்ற கணவர் இருந்துள்ளார். இவர் ஒரு கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகன், ஏழு வயதில் ஒரு மகள் மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை என்று மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த தில்ஷத் பானு தனது இரண்டு வயது குழந்தையை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

இதில் குழந்தை காயமடைந்துள்ளது. குழந்தை விளையாடும்போது தடுக்கி விழுந்து விட்டதாக கூறி தில்சாத் பானு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், மருத்துவர்களுக்கு குழந்தை உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகம் ஏற்பட அவர்கள் காவல்துறைக்கு காவல் கொடுத்தனர். 

இதற்கிடையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தில்சாத் பானுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.