குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் தனுஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய இருக்கும் காரணமாக படத்தின் செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் சில நாட்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு பிறகு மீண்டும் கேப்டன் மில்லர் படத்தில் இணைய இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனுஷ் உருவாகி உள்ள தெலுங்கு திரைப்படம் வாத்தி டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.