சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் வழக்கமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ள சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் இன்றிரவு சென்றார். அங்கு அவரை சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது.
இந்நிலையில், வழக்கமான பரிசோதனை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியதாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.