உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி…

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து,  மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

 81வயதாகும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு  இன்று காலையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் வெளியானதும், அவரது கட்சி தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமை விடுத்துள்ள அறிக்கையில்,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இன்று காலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சரத் பவார் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நவம்பர் 2-ம் தேதி வரை தொடர்ந்து சரத் பவார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார். அதைத் தொடர்ந்து நவம்பர் 4, 5-ம் தேதிகளில் ஷீர்டியில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.