சிதம்பரம் அருகே வீட்டுக்குள் புகுந்த முதலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வட அரிராஜபுரம் ஊராட்சி தாதம்பேட்டை புது தெருவில் உள்ள அம்புஜம் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலை புகுந்தது. இதனை பக்கத்து வீட்டு பெண் பார்த்து அலறி னார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து ஒரத்தூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தோட்ட காவலர் புஷ்பராஜ் ஆகியோர் வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் முதலையை பிடித்து சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். அதன்பிறகே அங்கு பரபரப்பு ஓய்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.