மும்பை அருகே ஆடி காரில் காயங்களுடன் கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஆடி காரில் காயங்களுடன் கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை – கோவா நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரை சோதனையிட்ட போலீசார், அதில் சடலமாக கிடந்த நபரை காரின் கண்ணாடியை உடைத்து மீட்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் புனேவைச் சேர்ந்த சஞ்சய் கர்லே என்பதை உறுதி செய்த போலீசார், அவர் உடல்களில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்ததால் கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.