கைதடி, முதியோர் இல்ல முதியோர்களுக்கு மதிய உணவு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவினர் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள ‘முதியோர் இல்ல’ முதியோர்களுக்கு, செவ்வாய்க்கிழமை (22) சிவில்-இராணுவ ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக மதிய விருந்து அளித்தனர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களின் பணிப்புரையின் பேரின் 52 வது காலாட் படைபிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் பிரியந்த ரணதுங்க அவர்கள் 523 வது காலாட் பிரிகேடின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை மேற்பார்வையிட்டார்.

இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகளுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துபசரித்தனர்.

Sri Lanka Army

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.