புதுடில்லி ஆஸ்திரேலியாவில், நான்கு ஆண்டுகளுக்கு முன், இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தப்பிய இந்தியர் நேற்றுபுதுடில்லியில் கைது செய்யப்பட்டார்.
இவரை பிடித்துக் கொடுப்பவருக்கு, ஆஸ்திரேலிய போலீஸ் 5.5 கோடி ரூபாய் பரிசு அறிவித்து இருந்தது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்விந்தர் சிங், 38. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகபணிபுரிந்து வந்த இவர், 2018 அக்டோபரில், குயின்ஸ்லாந்து கடற்கரையில், டோயா கார்டிங்லி, 24, என்ற இளம்பெண்ணை கொலை செய்தார்.
கொலை நடந்த இரண்டு நாட்களில் தன் குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு, தனியாக இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இதையடுத்து, இந்தக்கொலை வழக்கில் ராஜ்விந்த சிங்கை பிடித்து தருபவருக்கு, 5.5 கோடி ரூபாய் பரிசு தருவதாக குயின்ஸ்லாந்து மாநகர போலீஸ் அறிவித்தது.
மேலும், இந்தியாவில் தங்கியுள்ள ராஜ்விந்தர் சிங்கை நாடு கடத்துமாறு, ஆஸ்திரேலிய அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், புதுடில்லியில் வசித்து வந்த ராஜ்விந்தர் சிங்கை, டில்லி மாநகர போலீசார் நேற்று கைது செய்தனர்.
இங்கு, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, விரைவில் ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement