அதிகாலையில் வீடு புகுந்து பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை!!

மும்பையின் குர்லா பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க பெண் இரவு வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை அப்பெண்ணின் வீட்டிற்குள் 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

வீட்டிற்குள் நுழைந்த கும்பலை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு பெண்ணின் பிறப்புறுப்பில் சிகிரெட் கொண்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் பெண்ணின் மார்பு, கைகளை கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்துள்ளது.

இது குறித்து போலீசில் புகார் அளித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். வன்கொடுமைக்கு உள்ளான பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் 3 பேரும் அதே பகுதியில் வசிப்பர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலையில் வீடு புகுந்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.