கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடந்த 6-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.