தெலுங்கானா முதல்வர் மகளிடம் சி.பி.ஐ., ‛ சல்லடை

புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம், இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வரின் மகள் கவிதா, மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன் வாயிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை போனில் பேசியிருந்தது அம்பலமானது. இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு, 6ம் தேதி ஆஜராகும்படி, சி.பி.ஐ., தரப்பில் கவிதாவுக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.

latest tamil news

ஆனால், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், 11 – 14ம் தேதிக்குள் விசாரணை நடத்தும்படி கவிதா கோரிக்கை விடுத்தார். இதன்படி, ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் இன்று(டிச.,11 சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.