என்ன செய்வேன் தெரியுமா…? பாலியல் வன்கொடுமை குறித்து கீர்த்தி சுரேஷ்

பாலியல் துன்புறுத்தலும், அத்துமீறலும் அனைத்து திரையுலகிலும் என்றும் ஒலிக்கும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியே பகிரங்கமாக அறிவிப்பது மிகவும் குறைவானவர்களே. தென்னிந்தியாவில் மலையாள திரைப்பட உலகில் பாலியல் குற்றச்சாட்டு சமீப ஆண்டுகளில் பெரும் பூகம்பங்கள் வெடித்துள்ளது. 

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, நடிகை கீர்த்தி சுரேஷிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடன் பணிபுரியும் பலர் என்னுடன் பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிரங்கமாக விவாதித்துள்ளனர். ஆனால் அது போன்ற எதையும் நான் இதுவரை அனுபவிக்கவில்லை. நான் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவன். யாரும் என்னை தவறாக புரிந்து கொள்ளவில்லை, குறைந்தபட்சம் இன்னும் இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒன்று நடக்க வாய்ப்பில்லை” என்றார். 

வருங்காலத்தில் அப்படி ஒன்று நடந்தால், அதற்கு அவருடையே எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.”பட வாய்ப்புக்காக என்னை பாலியல் தேவைக்காக அழைக்கிறார் என்றால், அந்த படத்தின் வாய்ப்பையே நிராகரிப்பேன். திரைப்படத்தில் நடிப்பதைவிட்டு வேறு வேலைக்கு போவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மூத்த நடிகை மேனாக சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான “நடிகையர் திலகம்” படம் மூலம் பெரும் புகழை பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது, தெலுங்கில் நானி உடன் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.