திருமணத்திற்கு முன் ஒரு முகம்… திருமணத்திற்கு பின் வெளியான கணவனின் கொடூர முகம்..புதுப்பெண் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி ஓட்டுநரான இவருக்கு வசுமதி (26) என்ற மகள் இருந்தார். பொறியியல் பட்டதாதியான இவருக்கும், நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான வரதட்சணையும் இன்றி வினோத் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவன் மனைவி இடையே வரதட்சணாயால் தகராறு ஏற்பட்டது. இதனால் அத்தியப்பன் தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

இந்த நிலையில் மனவேதனையுடன் காணப்பட்ட வசுமதி கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வசுமதி இறந்தார். புதுப்பெண் தற்கொலை குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் வசுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் திருச்செங்கோடு உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர்கள், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தான் வசுமதி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான வசுமதியின் கணவர் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். அதுவரை வசுமதியின் உடலை பெற மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு போலீசார், விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துவிடுவோம் என்று உறுதியளித்தனர். ஆனாலும் வசுமதியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.