திராவிட 'மாடல்' தமிழ் வார்த்தையா..? நல்லாவே இல்ல வேற வெய்ங்க.. – தமிழிசை அட்வைஸ்

தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுவையின் துணை நிலை ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார். தமிழக பாஜகவில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் கணிசமானது. தற்போது அண்டை மாநிலத்தில் பொறுப்பு வகித்து வந்தாலும் தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆளுநர் என்பதை தாண்டி பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயலாற்றி வருவதாகவும் தமிழிசை மீது விமர்சனங்கள் உள்ளன.

குறிப்பாக தமிழக ஆளுநர் மற்றும் திமுக விஷயத்தில் அவர் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருவதாக சாடி வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர், ” திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை வைக்கலாம். மாடல் என்பது தமிழ் வார்த்தையா? முத்தமிழர் அறிஞர் கலைஞரின் மகன் திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை பயன்படுத்தலாம் என்று கூறினார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் தமிழகத்தில் தொடர் தற்கொலைகள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தடை சட்டம் இயற்றப்பட்டது முதல் தற்போது வரை 13 பேர் தற்கொலை செய்துகொண்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநரின் மவுனம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றொம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்.

இவற்றை தாமதம் என்று எடுத்துகொள்வதை விட, கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். சட்டசபை இயற்றப்படும் அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கிடையாது. அந்த சட்டம் குறித்த சந்தேகம் இருந்தால், மாற்றங்கள் வேண்டுமானால் மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும் என இவ்வாறு தமிழக பிரச்சினைகளுக்கு பாஜகவுக்கு ஆதரவாக தமிழிசை கருத்து தெரிவித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.