தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள திட்ட மாதிரியை பின்பற்ற வேண்டும்: மராட்டிய முதல்வருக்கு சுற்று சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள திட்ட மாதிரியை பின்பற்றுமாறு மராட்டிய மாநில முதல்வரை சுற்று சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளார். காலநிலை மாற்றத்தின் காரணமாக மராட்டிய மாநிலத்தில் ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான செயல்முறை திட்டங்களை அம்மாநில அரசு வகுத்துள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றத்திற் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உருவாகியுள்ள தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க மாதிரியை பின்பற்ற வேண்டும் என்றும் மராட்டிய முதல்வரும், காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் சுற்று சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட இயற்க்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.19,637 கோடி இழப்பீடாக வழங்கியிருப்பதாக அரசு தகவல் தெரிவிக்கும் நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள திட்டத்தை மராட்டிய அரசு உருவாக்கியுள்ளது அவசியம் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.