பீகாரில் ஆங்கில ஆசிரியரும் – அவரது மாணவியும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சமஸ்திப்பூர் நகரில் இயங்கி வரும் ஆங்கில பயிற்சி மையத்தில் சங்கீத் குமார் (42) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சில தினங்களுக்குமுன்பு சுவேதா குமாரி (20) என்ற மாணவி, ஆங்கிலம் கற்பதற்காக அந்த பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல மாணவி சுவேதா, ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலில் விழுந்தனர்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, சில நாட்களுக்கு முன் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆசிரியராக இருந்த ஒருவர், தான் நடத்திய பயிற்சி மையத்திற்கு வந்த மாணவியை திருமணம் செய்துகொண்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in