சுகாதார ரீதியில் பாதிப்பான நிலை இல்லை

வளிமண்டலத்தில் ஏற்பட்ட வளி மாசு காரணமாக சுகாதார ரீதியில் தற்போது பாதிப்பான நிலை இல்லை என்று தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் கண்டது ஆனால் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வளி தர சுட்டிக்கு அமைவாக 100ற்கும் 150ற்கும் இடைப்பட்ட தர நிலையில் இலங்கை காணப்படுகிறது.

வடக்கு, வடமேல், மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் நகரப் பிரதேசங்களில் காலநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சுற்றாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.