ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ஜன. 18ம் தேதி கடைசி நாள்..!

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 4 என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி, ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது எழுத்து மூலமாக விண்ணப்பித்தினை உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகின்ற 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.