எஸ்.பி.ஐ ஏடிஎம்மை உடைத்து ரூ.19.50 லட்சம் ரூபாய் கொள்ளை.. சேஸிங் செய்து விரட்டிப் பிடித்த போலீசார்…!

தெலுங்கானாவில், ஏடிஎம்மை உடைத்து 19 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த, முகமூடி கொள்ளையர்களை போலீசார் சேஸிங் செய்து பிடித்த பரபரப்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு கோரண்ட்லாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்து சிலர் கொள்ளையடிப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், கொள்ளையர்கள் பணப்பையுடன் காரில் தப்பிச் செல்ல முயன்ற போது சரியான நேரத்தில் போலீசார் அங்கு வந்தனர்.

போலீசாரைக் கண்டதும் ஒரு பணப்பையை தவறவிட்டு கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

ஆனால், எதிர் திசையில் மற்றொரு போலீஸ் வாகனம் வழிமறித்ததால், வந்த வழியே திரும்பிய கொள்ளையர்களின் வாகனம், சாலையில் கிடந்த பணப்பை மீது மோதியதில், ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன.

கொள்ளையர்களை விடாமல் துரத்திச் சென்ற போலீசார், அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்து, சாலையில் சிதறிய பணத்தையும், அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.