வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சூரத் :குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் வரலாறு காணாத வெற்றியை நினைவுபடுத்தும் விதமாக, 156 கிராம் எடையில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை, சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி வடிவமைத்து உள்ளார்.
சமீபத்தில் குஜராத் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், பா.ஜ., 156 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு படுத்தும் வகையில், 156 கிராம் எடை யில் பிரதமர் மோடியின் மார்பளவு தங்க சிலையை, சூரத் நகை வியாபாரி பசந்த் போஹ்ரா உருவாக்கி உள்ளார்.இதன் மதிப்பு 11 லட்சம் ரூபாயாகும்.
இது குறித்து பசந்த் போஹ்ரா கூறியதாவது:நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன். குஜராத் தேர்தல் வெற்றிக்கு காரணமான அவரை பாராட்டும் விதமாக, இந்த மார்பளவு சிலையை உருவாக்கிஉள்ளேன். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால், மூன்று மாதங்களாக 20 கலைஞர்களை வைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பலரும் இதை விலைக்கு கேட்கின்றனர். ஆனால், இதை விற்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். பிரதமரின் தங்க சிலை கடந்த மாதமே முழுமை யாக தயாரான நிலையில், 156 தொகுதிகளில் பெற்ற வெற்றியைக் குறிக்கும் வகையில், இதன் எடையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement