ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்: எட்டு பேர் மீது வழக்கு| Police on patrol: case against eight people

புவனகிரி: புவனகிரி பகுதியில் சந்தேகம், பணம் வைத்து சூதாடியவர்கள் மற்றும் மது குடிக்க அனுமதித்தவர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்புவனகிரி ஆதிவராகநத்தம் மாரியம்மன்கோவில்தெரு அருகில் பணம் வைத்து சூதாடிய ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்,27; கவிதாஸ்,39; தெற்குத்தெருவைச் சேர்ந்த பாஸ்கரன்,41 மற்றும் ஜீவாநந்தம் தெருவைச் சேர்ந்த அருள்,25; ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து ரூ.200 ரொகத்தை பறிமுதல் செய்தனர்.

கீரப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கம் அருகில் சந்தேகத்திற்கு ஏற்ப நின்றிருந்த கும்பகோணபம் பானாதுறை பகுதியைச் சேர்ந்த பரணிக்குமார்,32; என்பவர் மீது சந்தேகத்தின் பேரிலும், கீரப்பாளையம் கார் ஸ்டேன்டில் மது அருந்த அனுமதித்த புவனகிரி தில்லைநகர் செல்வக்குமார்,49; ஆதிவராகநத்தம் ஜீவாநந்தம் தெருவைச் சேர்ந்த மகேஷ்,33; குறியாமங்கலம் பஸ் டாப்பில் சி.முட்லுார் பிள்ளையார் கோவில்தெரு மணிகண்ட்ன,27; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.