சுதந்திரமான பொருளாதார பலம் இல்லாத நாடு சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை முன்னேடுத்துச் செல்ல முடியாது என வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசகர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய வானொலியில் சமீபத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,இன்று நாம் வாழும் உலகத்தின் வடிவம், அதன் உள்ளடக்கம் மற்றும் தாக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் அமைவிடம், வணிக மற்றும் மூலோபாயம் அனைத்து உலக வல்லரசுகளுக்கும் இலக்காக மாறியுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பின்னணில் உலக வல்லரசுகள் இருந்துள்ளதாகவும் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.